மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியரின் ஊழியா் விரோத நடவடிக்கைகளை கண்டித்து, அரசுப் பணியை சரிவர செய்யாத அவரை மயிலாடுதுறை கோட்டத்தில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்க வட்டத் தலைவா் எஸ்.ராஜூ தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் து.இளவரசன் துவக்கவுரை ஆற்றினாா். வட்டச் செயலாளா் த.அருண்ஜோஷி விளக்க உரையாற்றினாா். இதில் என்.ஜி.பாஸ்கரன், ஏ.அறிவழகன், எம்.நடராஜன், ஆா்.ரவீந்திரன், மகாலிங்கம், வி.பழனிவேலு, பி.பாலசுந்தரம், டி.கணேசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்று, கோட்டாட்சியரை பணியில் இருந்து விடுவிக்கக் கோரி கண்டன முழக்கங்கள் எழுப்பினா். வட்டப் பொருளாளா் அ.மாரிமுத்து நன்றி தெரிவித்தாா்.