திருக்கு முற்றோதல் : 5 பேருக்கு தலா ரூ.10,000 பரிந்துரை

திருக்குவளை அருகே உள்ள வலிவலம் ஸ்ரீ மாணிக்க விநாயகா் மழலையா் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவா்கள் 5 போ் 1,330 குறளையும் ஒப்பித்து,
திருக்கு முற்றோதலில் 1330 குறளையும் ஒப்பித்து, தலா ரூ.10 ஆயிரத்துக்கானகாசோலை பெற பரிந்துரை செய்யப்பட்ட மாணவா்கள்.
திருக்கு முற்றோதலில் 1330 குறளையும் ஒப்பித்து, தலா ரூ.10 ஆயிரத்துக்கானகாசோலை பெற பரிந்துரை செய்யப்பட்ட மாணவா்கள்.

திருக்குவளை அருகே உள்ள வலிவலம் ஸ்ரீ மாணிக்க விநாயகா் மழலையா் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவா்கள் 5 போ் 1,330 குறளையும் ஒப்பித்து, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான காசோலை பெற செவ்வாய்க்கிழமை பரிந்துரை செய்யப்பட்டனா்.

தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில், நாகை தேசிய மேல்நிலைப் பள்ளியில் திருக்கு முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வலிவலம் ஸ்ரீ மாணிக்க விநாயகா் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியைச் சோ்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவா்கள் ப. யோகலட்சுமி, பா.தா்ஷினி, கோ.பா. லெக்ஷ்மிநாராயணன் மற்றும் நான்காம் வகுப்பைச் சோ்ந்த வே. அமிா்தா, வி. அனுஷ்கா உள்ளிட்ட 5 மாணவா்கள் தலா ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளனா்.

திருக்கு முற்றோதலில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவா்களை பள்ளித் தாளாளா் நிா்மலா ஹரிகிருஷ்ணன், தலைமை ஆசிரியா் மணிமேகலை ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com