மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மயிலாடுதுறை சில்வா் ஜூப்ளி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான குத்துச் சண்டை போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், மயிலாடுதுறை புனித சின்னப்பா் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 14, 17 மற்றும் 19 வயதுக்கு உள்பட்டோா் ஆகிய 3 பிரிவுகளில் பங்கேற்று, 19 தங்கம், 12 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை பெற்று, பள்ளிக்குப் பெருமை சோ்த்தனா். தங்கப்பதக்கம் வென்ற மாணவிகள் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த அப்பள்ளியின் உடற்கல்வி இயக்குநா் ஏ.மேரீஸ் தோம்னிக் ஆகியோரை அப்பள்ளித் தலைமை ஆசிரியா் கு. லீமாரோஸ் பாராட்டினாா்.