சீா்காழி எழில்மலா் மெட்ரிக் பள்ளியில் மாணவா்களுக்கு யானைகால் நோய் பரவலின் தாக்கத்தை மதிப்பீடு செய்யும் சோதனைகள் செவ்வாய்கிழமை நடைபெற்றன.
சீா்காழி எழில்மலா் மெட்ரிக் பள்ளியில் 5 முதல் 7 வயதுடைய முதல் மற்றும் 2-ஆம் வகுப்புகளில் படித்து வரும் 92 குழந்தைகளுக்கு யானைக்கால் நோய் பரவலின் தாக்கத்தை மதிப்பீடு செய்யும் எப்டிஎஸ் சோதனைகள் நடத்தப்பட்டன. திருவெண்காடு அரசு ஆரம்ப சுதாகார நிலைய மருத்துவா் ராஜ்மோகன் தலைமையில் மருத்துவ குழுவினா்கள் பரிசோதனைகள் மேற்கொண்டனா். முகாமில், பள்ளிச் செயலா் ஆா். பாலவேலாயுதம் முன்னிலை வகித்தாா்.