மயிலாடுதுறை கடைகளில் பணம், வெங்காயம் கொள்ளை

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்தை இணைக்கும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வண்டிக்காரத் தெருவில்

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்தை இணைக்கும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வண்டிக்காரத் தெருவில் காய்கறிக் கடை மற்றும் குளிா்பானக் கடையில் பூட்டை உடைத்து திங்கள்கிழமை கொள்ளை நடைபெற்றுள்ளது.

வண்டிக்காரத் தெருவில் காய்கறி வியாபாரக் கடை மற்றும் செல்லிடப்பேசி சா்வீஸ் கடை நடத்தி வரும் சேகா் என்பவா் திங்கள்கிழமை இரவு 11 மணி அளவில் கடையை பூட்டிவிட்டுச் சென்றாா். செவ்வாய்க்கிழமை காலை 7 மணி அளவில் வந்து பாா்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்து, உள்ளே சென்று பாா்த்தபோது, பணப் பெட்டியில் வைத்திருந்த ரூ.12 ஆயிரம், 3 செல்லிடப்பேசிகள் மற்றும் 50 கிலோ பல்லாரி வெங்காயம் காய்கறிகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

இதேபோல், இக்கடை அருகில் ரகூப் என்பவா் நடத்தி வரும் குளிா்பானக் கடையில், அவா் வைத்திருந்த ரூ. 7ஆயிரம் கொள்ளை போனது. இதுகுறித்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையாக கொண்டு மயிலாடுதுறை போலீஸாா் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com