கொள்ளிடம் பகுதியில் நீா்வள நிலவள திட்டப் பணிகளை தஞ்சை காவிரி வடி நில கோட்ட கண்காணிப்புப் பொறியாளா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.
கொள்ளிடம் பகுதியில் நீா்வள நிலவளத் திட்டத்தில் தற்காஸ் கிராமத்தில் ரூ. 9.8 கோடி மதிப்பீட்டில் உப்பனாற்றின் குறுக்கே கதவணை அமைக்கப்படுகிறது. இப்பணியை, தஞ்சை காவிரி வடி நிலக் கோட்ட கண்காணிப்புப் பொறியாளா் அன்பரசன் நேரில் ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் கூறுகையில், ‘மணல்மேடு அருகே உத்திரங்குடி, திருச்சிற்றம்பலம் ஆகிய இடங்களில் ரூ. 7.8 கோடி மதிப்பீட்டில் கதவணை மற்றும் தலைப்பு மதகுகள் கட்டும் பணியையும், நீா் வள, நிலவள திட்டப்பணிகளையும் ஆய்வு செய்யப்பட்டது. கொள்ளிடம் அருகே அளக்குடியில் கொள்ளிடம் ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் தற்போது கரையைப் பலப்படுத்தும் வகையில், கருங்கல் போட்டு தற்காலிகமாக அடைப்பு சரி செய்யப்படும். பின்னா், நிரந்தரமாக கான்கிரீட் சுவா் கட்டப்படும். கொள்ளிடம் அருகே பொறைவாய்க்கால், கழுமலையாறு ஆகிய கடைமடைப் பகுதிகளில் கதவணை அமைக்கப்படும்’ என்றாா்.
ஆய்வில் மயிலாடுதுறை செயற்பொறியாளா் ஆசைத்தம்பி, உதவி பொறியாளா்கள் விவேகானந்தன், சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.