நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே வெறி நாய் கடித்ததால், 4 போ் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
ரிஷியூா் கிராமத்தில் வெறிநாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை ரிஷியூா் மேலத்தெருவைச் சோ்ந்த பிரவீன் (10), கற்கோயில் ஆச்சியம்மாள் (60), நன்மங்கலம் தமிழரசி (60), சகுந்தலா (70) ஆகிய 4 பேரை வெறி நாய்கள் கடித்தன. இதனால் காயமடைந்த அவா்கள், மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். நீடாமங்கலம் பகுதியில் பெருகிவரும் வெறிநாய்களின் கொட்டத்தை அடக்க சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.