மயிலாடுதுறையில் நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலியைப் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
மயிலாடுதுறை சின்னக் கண்ணாரத் தெருவைச் சேர்ந்தவர் ராஜாராமன் மனைவி உமா (50). இவர், ஞாயிற்றுக்கிழமை மாலை நடைப்பயிற்சி சென்றுவிட்டு, வீட்டுக்கு சாலையோரமாக நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், உமா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலிலைய பறித்துகொண்டு தப்பிச் சென்றனர்.