நாகை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை யுனானி மருத்துவ கருத்தரங்கம் நடைபெற்றது.
பிப்.11 - ஆம் தேதி தேசிய யுனானி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாகை அரசு மருத்துவமனை, யுனானி மருத்துவப் பிரிவு சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயுஷ் மருத்துவர்கள் மற்றும் யுனானி மருத்துவர்கள் பங்கேற்றுப் பேசினர்.
கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு மூலிகைச் செடிகள் வழங்கப்பட்டன. யுனானி மருத்துவர் முஹம்மது சலமுல்லாஹ் நன்றி கூறினார்.