ஆறுகாட்டுத்துறையில் தூண்டில்முள் வளைவு அமைக்க ஆய்வு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுத்துறை கடலோரத்தில் தூண்டில்முள் வளைவு 

நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுத்துறை கடலோரத்தில் தூண்டில்முள் வளைவு அமைப்பது தொடர்பான ஆய்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் தூண்டில்முள் வளைவு அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தூண்டில்முள் வளைவு அமைப்பது தொடர்பாக முதல் கட்ட ஆய்வுப் பணிக்காக தமிழக அரசு ரூ. 1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. ஆய்வு குழுவினர், ஆறுகாட்டுத்துறை கிராமத்தில் கடற்கரைப் பகுதி, ஆற்று முகத்துவாரம் ஆகியவற்றை பார்வையிட்டு மீனவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
ஆய்வு பணியின்போது, மீன்வளத் துறை முதன்மை பொறியாளர் ராமநாதன், கடல் ஆராய்ச்சியாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com