சகோதரர்களுக்கிடையே தகராறு: நெல் வயல் தீயிட்டு கொளுத்தி சேதம்

திருக்குவளை அருகேயுள்ள வலிவலத்தில் சகோதரர்களுக்கிடையேயான தகராறில் நெல்வயல் தீயிட்டு  கொளுத்தி சேதப்படுத்தப்பட்டது. 

திருக்குவளை அருகேயுள்ள வலிவலத்தில் சகோதரர்களுக்கிடையேயான தகராறில் நெல்வயல் தீயிட்டு  கொளுத்தி சேதப்படுத்தப்பட்டது. 
கொடியாலத்தூர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் ஆதியப்பன் மகன் சோமசுந்தரம். இவரது சகோதரர் சுவாமிநாதன் மனைவி லதாவுடன் திருவாரூர் பாத்திமா காலனியில் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான நிலம் வலிவலம் சர்வோதயம் விடுதி அருகில் உள்ளது. இவர் தற்பொழுது சம்பா சாகுபடி செய்து அறுவடை செய்த நெல்லை ஈரப்பதம் காய்வதற்காக ( அறிகாய்ச்சலுக்காக ) தனது வயலில் காய வைத்துள்ளார். இந்நிலையில், சகோதரர்களுக்குள் குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சோமசுந்தரம் சுவாமிநாதனை பழிவாங்கும் நோக்கில் அவரது வயலில் பரப்பியிருந்த நெற்பயிரை தீயிட்டு கொளுத்தியதாக கூறப்படுகிறது. நெல்வயல் தீப்பிடித்து எரிவதை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து தீ அருகில் உள்ள வீடுகளுக்கும் கடைகளுக்கும் பரவாமல் தடுத்து அணைத்தனர். 
இதுகுறித்து, சுவாமிநாதன், வலிவலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சார்பு ஆய்வாளர் வி.கே. குமார், தனிப்படை காவலர் கா. ரமேஷ்குமார் ஆகியோர் வழக்குப் பதிந்து சோமசுந்தரத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com