முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
மூதாட்டியிடமிருந்து 8 பவுன் நகைத் திருட்டு
By DIN | Published On : 28th February 2019 09:23 AM | Last Updated : 28th February 2019 09:23 AM | அ+அ அ- |

நாகையில் மூதாட்டியிடமிருந்து 8 பவுன் நகையை நூதன முறையில் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகை, வடக்கு பால்பண்ணைச்சேரி கீழத்தெருவைச் சேர்ந்தவர் க. தனலெட்சுமி (69). இவர், செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் தங்க நகையை சுத்தம் செய்து தருவதாக கூறியுள்ளனர். இதற்கு சம்மதித்த தனலெட்சுமியும் தான் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலி சங்கிலி மற்றும் மோதிரம் ஆகியவற்றை கழட்டிக் கொடுத்துள்ளார். பின்னர், அந்த நபர்கள் ஒரு வகையான பவுடரை தனலெட்சுமியுடன் கொடுத்து அதை கரைத்துக் கொண்டு வருமாறு கூறியுள்ளனர். இதையடுத்து தனலெட்சுமி வீட்டுக்குள் சென்றதும் அந்த நபர்கள் 8 பவுன் நகைகளை திருடிக் கொண்டு தப்பியோடி விட்டனராம். இதுகுறித்து நாகூர் காவல் நிலையத்தில் தனலெட்சுமி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.