தவ்ஹீத் ஜமாத் செயல்வீரர்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நாகை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நாகூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நாகை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நாகூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஜன. 27-ஆம் தேதி விழுப்புரத்தில் திருக்குரான் மாநாடு நடைபெறவுள்ளதையொட்டி இந்தக் கூட்டம் நடைபெற்றது. 
தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நாகை மாவட்டத் தலைவர் (தெற்கு) செய்யது அலி நிஜாம் தலைமை வகித்தார். மாநிலப் பேச்சாளர் ஜமால் உஸ்மானி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார். அமைப்பின் மாவட்ட மற்றும் கிளை  நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டையில் நடைபெறும் திருக்குரான் மாநாட்டில் நாகை மாவட்டத்திலிருந்து திரளானோர் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com