திருமருகல் அருகேயுள்ள கீழகரையிருப்பு, பண்டாரவாடை ஊராட்சி பகுதிகளில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அக்கட்சியின் நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் என். கவுதமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நாகை நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் கிரகாம்பெல், திருமருகல் வடக்கு ஒன்றியச் செயலர் செல்வசெங்குட்டுவன், பொதுக் குழு உறுப்பினர் மணிவண்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோகன், மாவட்ட மாணவரணி துணைச் செயலர் உமாபதி உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பெற்று குறைகளை கேட்டறிந்தனர்.