வேதாரண்யத்தில் வர்த்தகர்களுடன் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினர்.
இதில், வேதாரண்யம் காவல் துணைக் கண்காணிப்பாளர் இராம. ஸ்ரீகாந்த் பங்கேற்று, வர்த்தகர்களுடன் உரையாடினார். வர்த்தகர் சங்கத் தலைவர் எஸ்.எஸ். தென்னரசு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வர்த்தகர்கள், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
வர்த்தகர் சங்கச் செயலாளர் ஏ.எம். சுபஹானி, பொருளாளர் ஆர்.எஸ். சீனிவாசன், அரிமா சங்க முன்னாள் ஆளுநர் வேதநாயகம், நாகை தெற்கு மாவட்ட வர்த்தகர் சங்கத் தலைவர் அம்பாள் பி. குணசேகன், துணைச் செயலாளர் எம். தங்கதுரை உள்ளிட்டோர்பங்கேற்றனர்.