தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் 13-ஆம் பேராயருக்கு நாளை பட்டாபிஷேகம்

தரங்கம்பாடி புதிய எருசலேம் ஆலயத்தில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் 13-ஆவது பேராயராக


தரங்கம்பாடி புதிய எருசலேம் ஆலயத்தில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் 13-ஆவது பேராயராக தேர்வு செய்யப்பட்டுள்ள டேனியல் ஜெயராஜ் ஆயருக்கு திங்கள்கிழமை (ஜன.14) பட்டாபிஷேக விழா நடைபெறவுள்ளது.
நாகை மாவட்டம், தரங்கம்பாடியை தலைமையிடமாகக்கொண்டு 1919-இல் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை உருவானது. இதன் முதல் பிஷப்பாக எர்னஸ்ட் ஹைமன் என்பவர் 1921 முதல் 1926 வரை பொறுப்பு வகித்தார்.
இந்த சபையில் இதுவரை 12 பேராயர்கள் பதவி வகித்துள்ளனர். தற்போது, 13-ஆவது பேராயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மறைதிரு. டேனியல் ஜெயராஜிக்கு உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியும் திருச்சபையின் நிர்வாகியுமான வெங்கட்ராமனின் முன்னிலையில் தரங்கம்பாடி புதிய எருசலேம் ஆலயத்தில் திங்கள்கிழமை பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிறிஸ்தவ திருச்சபைகளின் பேராயர்கள், ஆயர்கள், பிரதிநிதிகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பொறியாளர் தியாகராஜன், பேராசிரியர் ஜான்சன் ஜெயக்குமார், ஆயர் நவராஜ் ஆபிரகாம், த.பே.மா.லு. கல்லூரியின் முதல்வர் ஜீன் ஜார்ஜ், தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் பள்ளியின் தலைமையாசிரியர் ஜான் சைமன் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com