எஸ்.டி.பி. ஐ. கட்சி பொதுக்கூட்டம்: ஓவியப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

நாகை மாவட்டம், திட்டச்சேரியில்  எஸ்.டி.பி.ஐ. கட்சி, நாகை  தெற்கு மாவட்டம் சார்பில்  பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், திட்டச்சேரியில்  எஸ்.டி.பி.ஐ. கட்சி, நாகை  தெற்கு மாவட்டம் சார்பில்  பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாபர் மசூதி மற்றும் இந்தியாவை மீட்போம்  என்றக் கோரிக்கையை முன்வைத்து  நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு, அக்கட்சியின் நாகை தெற்கு மாவட்டத் தலைவர் எம். முஹம்மது அபுகாசீம் தலைமை  வகித்தார். மாநிலப் பேச்சாளர் கே. எஸ். இப்ராஹீம், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நாகை மாவட்டத் தலைவர் பி. முஹம்மது யாமீன்ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
பொதுக்கூட்ட நிறைவில், பாபர் மசூதியை மீட்போம் எனும் தலைப்பில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற திட்டச்சேரி உஸ்மானியாத் தெருவைச் சேர்ந்த எம். ஹாசீப் நசீம், சாலைத் தெருவைச் சேர்ந்த இஹ்வான் சமீர், எஸ். நூருல் நசீல், எம். பஹீம் யாசிர் ஆகிய மாணவர்களுக்கு  பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மற்றும்  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com