பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

சீர்காழி அருகேயுள்ள திருப்பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாள்  திருக்கல்யாணம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சீர்காழி அருகேயுள்ள திருப்பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாள்  திருக்கல்யாணம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருப்பார்த்தன்பள்ளியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பார்த்தசாரதி பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் 30 நாள்கள் நடைபெற்று வந்த திருப்பாவை நிறைவாக போகி அன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
முன்னதாக, பெருமாள் - ஆண்டாள் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், வழிபாடு செய்யப்பட்டு, திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. ஷேசாத்திரி பட்டாச்சாரியார் திருக்கல்யாணத்தை செய்து வைத்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com