பொங்கல் விளையாட்டுப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு மண்பாண்டங்கள் பரிசளிப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளாக புதுப் பானை, சட்டி, குடிநீர் ஜாடி உள்ளிட்ட மண்பாண்டங்கள் செவ்வாய்க்கிழமை பரிசுகளாக அளிக்கப்பட்டன.
பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில், வேதாரண்யம் வட்டார விவசாயிகள் சங்கம் சார்பில், 3 -ஆம் ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல், பாரம்பரிய விளையாட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு கவிஞர் சு. தமிழொளி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சு. வெற்றிச்செல்வன், ஆசிரியர் வே. சத்தியசிவம், வட்டார விவசாயிகள் சங்கச் செயலாளர் தா. ஒளிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விளையாட்டு விழாவை ஊராட்சி முன்னாள் தலைவர் சிவகுரு. பாண்டியன் தொடங்கி வைத்தார். வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் ந. செல்வகுமார், வானகம் அறங்காவலர் ஹீலர் க. குமரவேல், விவசாயிகள் சங்கத் தலைவர் டி.வி. ராஜன், கால்நடை மருத்துவர் சி. மீனாட்சிசுந்தரம், ஆசிரியர்கள் சு. பாஸ்கரன், என். அனிதா, பல குரல் கலைஞர் ஜெ.கே.வி.கே. அன்புவேலன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
விழாவில், நாட்டுப்புறக் கலை நிகழ்வுகளில் பங்கேற்றோர், விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் பரிசுகளாக மண்பாண்டங்கள் அளிக்கப்பட்டன.
விழாவையொட்டி, அரங்கில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், பேராசிரியர் இலக்குவனார் ஆகியோரது படங்களை புலவர் ப. தவமணி வெற்றியழகன், விவசாய சங்க நிர்வாகி வி. காமேசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
வாய்மேடு நம்மாழ்வார் நாற்றுப் பண்ணை சார்பில் மரக்கன்றுகள் அளிக்கப்பட்டன. இயற்கை வேளாண் செயற்பாட்டாளர் விஜயலெட்சுமி சிவாஜி ஏற்பாட்டில் 300 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சியாக அமைக்கப்பட்டிருந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com