வண்ணக் கோலமிட்டு கொண்டாட்டம்

பூம்புகார் பகுதியில் புதன்கிழமை வண்ணக் கோலமிட்டு மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 

பூம்புகார் பகுதியில் புதன்கிழமை வண்ணக் கோலமிட்டு மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 
பொங்கல் பண்டிகையையொட்டி, திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் வளர்த்து வரும் பசு மற்றும் காளை மாடுகளை குளிப்பாட்டி மஞ்சள், குங்குமம், சந்தனத்தால் பொட்டு வைத்து மாலைகள் அணிவித்து பூஜை செய்து சக்கரைப் பொங்கல் வைத்து படையலிட்டனர். பூஜையின்போது விவசாயிகள், பொது மக்கள் பசுக்களை வணங்கினர். மாட்டுப் பொங்கலை சிறப்பாக வரவேற்கும் வகையில் அதிகாலையிலேயே பெண்கள் தங்களது வீடுகளில் பொங்கலை போற்றும் வகையில் வண்ணக் கோலங்கள் இட்டு வரவேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com