எம்ஜிஆர் பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நாகை மாவட்டத்தில், நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், பொறையாறு உள்ளிட்ட பல்வேறு

நாகை மாவட்டத்தில், நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், பொறையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
அதிமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 102-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நாகையில், அதிமுக நகரச் செயலர் தங்க. கதிரவன் தலைமையில் கோட்டைவாசல் பகுதியிலிருந்து  இருசக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்று நாகை நகராட்சிக்குள்பட்ட வார்டு பகுதிகளில் கட்சிக் கொடியேற்றி, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. 
முன்னதாக,  நாகை ஸ்ரீசெளந்தரராஜப் பெருமாள் கோயில் அருகேயுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர் ஆர். ஜீவானந்தம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். 
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறையில், சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பு, பேரவை உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில், நகரச் செயலர் செந்தில்நாதன், நகர அவைத் தலைவர் எஸ். அலி, கூட்டுறவு சங்கத் தலைவர் வி. பழனிசாமி, முன்னாள் நகரச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சீர்காழியில்...
சீர்காழி ஈசானியத் தெருவில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு எம்எல்ஏ பி.வி. பாரதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், நகரச் செயலர் பக்கரிசாமி, ஒன்றியச் செயலர் ராஜமாணிக்கம், துணைச் செயலர் ரவிச்சந்திரன், ஜெ.பேரவைச் செயலர் ஏ.வி. மணி, முன்னாள் எம்எல்ஏ பூராசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
இதேபோல், கொள்ளிடத்தில் ஒன்றியச் செயலர் நற்குணன்  தலைமையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ம. சக்தி, தொகுதி இணைச் செயலர் ராஜேந்திரன், பொறுப்பாளர்கள் ஆனந்த நடராஜன், சம்பந்தம், வீரபாண்டியன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
பொறையாறில்...
செம்பனார்கோவில் அருகேயுள்ள காலகஸ்திநாதபுரத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு பூம்புகார் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார். இதில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் ரெங்கநாதன், விஜயபாலன், வடக்கு ஒன்றியச் செயலர் டி. சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
குத்தாலத்தில்...
மங்கநல்லூர் பேருந்து நிலையத்தில் குத்தாலம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில், நடிப்பிசை புலவர் கே.ஆர். ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவரும், தெற்கு ஒன்றியச் செயலருமான என். தமிழரசன் தலைமையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில், மாவட்ட மருத்துவர் அணிச் செயலர் சண்முகம்,  ஊராட்சி முன்னாள் தலைவர்கள்  இளங்கோவன், சாமிக்கண்ணு, செந்தில்குமார், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல், குத்தாலம் ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் எம்ஜிஆர் திருவுருவப்படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com