மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

பொறையாறு அருகேயுள்ள தரங்கை பேராயர்  மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து இந்தி


பொறையாறு அருகேயுள்ள தரங்கை பேராயர்  மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் உள்ளிருப்பப் போராட்டம் நடைபெற்றது. 
சங்க மாவட்ட குழு உறுப்பினர் குணசேகரன் தலைமையில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து திங்கள்கிழமை  போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வகுப்பு புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com