திருக்குவளை அருகேயுள்ள சாலையோர பள்ளம் அண்மையில் சீரமைக்கப்பட்டது.
திருக்குவளையிலிருந்து சாட்டியக்குடி செல்லும் சாலையில் சுந்தரபாண்டியத்துக்கு முன்பாக சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பள்ளம் சீரமைக்கவில்லை. இந்நிலையில், இதுகுறித்து தினமணி நாளிதழில் ஆராய்ச்சி மணி பக்கத்தில் செய்தி வெளியானதை தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள பள்ளம் மண் கொண்டு நிரப்பப்பட்டு சீரமைக்கப்பட்டது.