இந்து மக்கள் கட்சி பிரமுகருக்கு சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டல்: காவல்நிலையத்தில் புகார்

இந்து மக்கள் கட்சி பிரமுகருக்கு தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டல் விடுத்தவர்கள் மீது

இந்து மக்கள் கட்சி பிரமுகருக்கு தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
சீர்காழி தென்பாதி வ.உ.சி. தெருவில் வசிப்பவர் ஜெ. சுவாமிநாதன்.இவர், இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளராக உள்ளார்.
இவருக்கு முகநூல், தொலைபேசி வாயிலாகவும், கட்செவி அஞ்சலிலும் சிலர் மிரட்டல் விடுத்துப் பேசியும், கருத்துக்களை பதிவிட்டும் வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மிரட்டல் வரும் செல்லிடப்பேசி எண்களை குறிப்பிட்டு, சீர்காழி காவல் நிலையத்தில் அக்கட்சியினர் புகார் அளித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com