பெரம்பூர் மற்றும் குத்தாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் (இயக்குதல் மற்றும் பராமரித்தல்) வை. முத்துக்குமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பூர் மற்றும் கடலங்குடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளன. இதனால், இந்த துணை மின் நிலையங்களில் இருந்து, மின் விநியோகம் பெறும் பெரம்பூர், கடக்கம், கிளியனூர், சேத்தூர், முத்தூர், எடக்குடி, பாலூர், கொடவிளாகம், ஆத்தூர், கடலங்குடி, வாணாதிராஜபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை, கோழிகுத்தி, முருகமங்கலம், திருமணஞ்சேரி, ஆலங்குடி மற்றும் குத்தாலம் ஆகிய பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 8 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.