நடிகர் ரஜினிகாந்தின் கனவை உடைத்தவர் மு.க. ஸ்டாலின்: திண்டுக்கல் லியோனி பெருமிதம்

நடிகர் ரஜினிகாந்த்தின் கனவை மக்களவைத் தேர்தல் மூலம் உடைத்தவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  என திண்டுக்கல் ஐ. லியோனி கூறினார். 

நடிகர் ரஜினிகாந்த்தின் கனவை மக்களவைத் தேர்தல் மூலம் உடைத்தவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  என திண்டுக்கல் ஐ. லியோனி கூறினார். 
சீர்காழி நகர திமுக  சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 96-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் மக்களவைத் தேர்தல் வெற்றி நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் நகர துணைச் செயலாளர் ஏபிஎஸ். குமார் தலைமை வகித்தார். நகர செயலாளர் ம. சுப்பராயன்  வரவேற்றார். நாகை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா எம். முருகன், தலைமை தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் குத்தாலம் பி. கல்யாணம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம். பன்னீர் செல்வம், இராம. இளங்கோவன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர். கலைவாணன், ஒன்றியச் செயலாளர்கள் பிரபாகரன், சசிக்குமார், செல்ல.சேது, ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். 
கூட்டத்தில், திண்டுக்கல்  ஐ. லியோனி பேசியது:
 தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதிக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் கனவு கண்டு வந்தார். அவரது கனவை, மக்களவைத் தேர்தலில் 53 சதவீத வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றதன் மூலம் உடைத்தவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
கொள்கையில்லாவிட்டால் எந்தக் கட்சியும் நிரந்தரமாக இருக்க முடியாது. 1949-இல் பேரறிஞர் அண்ணா தொடங்கிய கொள்கை  முழக்கம் உள்ள  இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். குடிநீர் தட்டுப்பாடு இருக்கும்போது, தமிழக முதல்வர் யாகம் மட்டுமே  வளர்ப்பது நியாயமா?. குடிநீர் தட்டுப்பாடைப் போக்க நடவடிக்கை எடுக்கவேண்டாமா? என்றார் லியோனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com