தீமிதி உத்ஸவம்

திருவெண்காடு அருகே உள்ள கீழசட்டநாதபுரம் கம்பகாமாட்சி அம்மன் கோயிலில் தீமிதி உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடந்தது.


திருவெண்காடு அருகே உள்ள கீழசட்டநாதபுரம் கம்பகாமாட்சி அம்மன் கோயிலில் தீமிதி உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடந்தது.
இதையொட்டி, காவிரி கரையிலிருந்து பக்தர்கள் பால்காவடி, அலகுகாவடி, தீச்சட்டி ஆகியவற்றை மேளதாளம் முழங்கிட எடுத்து வந்தனர். பின்னர், கோயிலின் வாயிலில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். இதற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். திருவெண்காடு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com