காரைக்கால் மாங்கனித் திருவிழாவையொட்டி நாகப்பட்டினம், தரங்கம்பாடி தாலுகாவுக்கு உள்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜெ. சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:
63 நாயன்மார்களில் புனிதவதியார் என்று அழைக்கப்படும் காரைக்கால் அம்மையாரும் ஒருவர். நிகழாண்டு காரைக்கால் அம்மையால் கோயிலில் மாங்கனித் திருவிழா சனிக்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவில் காரைக்கால் மட்டுமன்றி அதை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளான நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நாகை, தரங்கம்பாடி தாலுகாக்களை சேர்ந்த பக்தர்கள் பெருமளவில் கலந்துகொள்வது வழக்கம். இதைக் கருத்தில் கொண்டு ஜூலை 16-ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.