நாகப்பட்டினம்
ரோட்டரி சங்க நிர்வாகிகள் பணியேற்பு
ரோட்டரி கிளப் ஆஃப் மயிலாடுதுறை டெல்டா சங்க நிர்வாகிகள் பணியேற்பு விழா, மயிலாடுதுறை திருவிழந்தூரில் அண்மையில் நடைபெற்றது.
ரோட்டரி கிளப் ஆஃப் மயிலாடுதுறை டெல்டா சங்க நிர்வாகிகள் பணியேற்பு விழா, மயிலாடுதுறை திருவிழந்தூரில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைவர் மு.ரா.பாஸ்கரன் தலைமை வகித்தார். முன்னாள் செயலாளர் செல்வம் வரவேற்றார். இதில், ரோட்டரி முன்னாள் ஆளுநர் ஏ.மணி, அடுத்த ஆண்டுக்கான ஆளுநர் எம்.பாலாஜிபாபு, உதவி ஆளுநர் எம்.என்.ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு, புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
இதில் புதிய தலைவராக என்.வெற்றிவேந்தன், செயலாளராக பி.டி.ஆனந்த், பொருளாளராக எஸ்.சரவணன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். முன்னாள் பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.