சீர்காழி பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்புப் பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.
மக்களவை முன்னாள் உறுப்பினர் சுப்ரவேலு சாரதா நினைவு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் அருட்செல்வம் தலைமை வகித்தார். முனைவர் சிவராமன் போட்டித் தேர்வை எதிர்கொள்ளும் விதம் குறித்து விளக்கினார். அறக்கட்டளை பொருளாளர் கண்ணகி வரவேற்றார். செயலாளர் பெரியார் செல்வம் நன்றிகூறினார்.