நாகை வெளிப்பாளையம், முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் வழிபாடு நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழாவையொட்டி, நாகை மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் நாகை அகஸ்தீஸ்வர சுவாமி கோயிலிலிருந்து பூத்தட்டுகளை எடுத்து வந்து முத்துமாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.