சீர்காழி பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 15) மின்விநியோகம் இருக்காது என, மின்வாரிய செயற்பொறியாளர் சு. சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வைத்தீஸ்வரன்கோயில் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (ஜூன் 15) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், சட்டநாதபுரம்,புங்கனூர், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புன்கூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.