நாடி ஜோதிட புரோக்கர்களை கட்டுப்படுத்தக் கோரிக்கை

வைத்தீஸ்வரன்கோயிலில் நாடி ஜோதிட புரோக்கர்களை கட்டுப்படுத்த வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


சீர்காழி, ஜூன் 13: வைத்தீஸ்வரன்கோயிலில் நாடி ஜோதிட புரோக்கர்களை கட்டுப்படுத்த வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை 
விடுத்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜெ. சுவாமிநாதன் வெளியிட்ட அறிக்கை: வைத்தீஸ்வரன்கோயிலில் நாடி ஜோதிட ம் பார்க்கும் சிலர் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து பணத்தைப் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றனர். இதற்காக இப்பகுதியில்150-க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் உள்ளனர். இவர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களை வற்புறுத்தி, கட்டாயமாக நாடி ஜோதிடம் பார்க்க அழைத்துச் செல்கிறார்கள். இதற்கு இவர்களுக்கு கமிஷன் வழங்கப்படுகிறது.  இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, நாடி ஜோதிட புரோக்கர்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com