கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியானோர் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியானோர் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  இயற்கை இடர்பாடுகள், சாலை விபத்துகள், நீர் விபத்துகள், தீ விபத்துகள், திருட்டுக் குற்றங்கள் போன்ற நிகழ்வுகளின் போது, துணிச்சலுடன் செயல்பட்ட பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பெறத் தகுதியானவர்கள், தங்கள் விண்ணப்பத்தை இ- பிரிவு, முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு ஜூன் 23-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com