நீடூர் பகுதியில் ஜூன் 19 மின்தடை

நீடூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் புதன்கிழமை (ஜூன் 19) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நீடூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் புதன்கிழமை (ஜூன் 19) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து,  தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் (இயக்குதல் மற்றும் பராமரித்தல்) வை. முத்துக்குமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நீடூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் புதன்கிழமை நடைபெற உள்ளதால், நீடூர் துணை மின்நிலையத்தில் இருந்து, மின் விநியோகம் பெறும் பகுதிகளான நீடூர், மல்லியக்கொல்லை, வில்லியநல்லூர், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழித்தேவன், கங்கணம்புத்தூர், மேலாநல்லூர், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லூர், மேலமருதாந்தநல்லூர், பொன்மாசநல்லூர் ஆகிய ஊர்களுக்கும், அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் புதன்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com