குரூப் 4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு நாகை மாவட்ட

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு நாகை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் 4 தேர்வு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு, நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வப் பயிலும் வட்டத்தில் ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. தகுதி வாய்ந்த வல்லுநர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர். இந்தப் பயிற்சி வகுப்பு, திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறும். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பணிநாடுநர்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்றுப் பயன் பெறலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com