திருக்குவளை காவல் துறையினர் சார்பில் பள்ளி மாணவர்களிடையே தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். திருக்குவளை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் செளந்தரராஜன், முருகேசன் ஆகியோர், தலைக்கவசம் அணிவது தொடர்பான நன்மைகள் மற்றும் சாலை விதிகளை பின்பற்றுதல் தொடர்பாக விளக்கிப் பேசினர்.
இதில் ஜெரால்டு, பாப்பாசெல்வம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். பட்டதாரி ஆசிரியர் வீரமணி நன்றி கூறினார்