நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியரக முதன்மைக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று, தங்கள் கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.