நாகை பழைய பேருந்து நிலையம் அருகே இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்து பயணிகள் 8 பேர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் காயமடைந்தனர்.
நாகை பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருவாரூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும், நாகையிலிருந்து (அக்கரைப்பேட்டை வழி) வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், பழையப் பேருந்து நிலையம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில், பேருந்து பயணிகள் கீழ்வேளூர் சுரேஷ்பாபு (29), ராகவன் (60), விஜயா (50), முபாரக் பாட்சா (29), கோகூர் அகிலா(22) உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து நாகை நகர காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.