சீர்காழி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் நடைபெற்ற உலக இசை தின போட்டிகளில் வெற்றி பெற்ற விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளி மாணவர் காவியன் குரலிசைப் போட்டியில் முதலிடம், மாணவர் பரத் ஆனந்த் வயலின் போட்டியில் 2-ஆம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளித் தாளாளர் கே.வி. ராதாகிருஷ்ணன், செயலர் அனிதாராதாகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர். இதில், பள்ளி முதல்வர் ஜோஷ்வா பிரபாகரசிங் உடனிருந்தார்.