நாகப்பட்டினம்
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
சீர்காழி அருகேயுள்ள புங்கனூர் கிராமத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேமுதிக சார்பில் நிவாரண உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
சீர்காழி அருகேயுள்ள புங்கனூர் கிராமத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேமுதிக சார்பில் நிவாரண உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
புங்கனூர் கிராமத்தில் ஜூன் 22-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 6 குடிசை வீடுகள் எரிந்து, வீடுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன. இதற்கிடையில், நாகை வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்டச் செயலர் ஜலபதி தலைமையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாய், போர்வை, சேலை, வேட்டி, குடம், அரிசி மூட்டைகள், பாத்திரங்கள் வழங்கப்பட்டன. அப்போது, தேமுதிக மாவட்ட துணைச் செயலர் பாஸ்கரன், ஒன்றியச் செயலர் ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.