யோகா விழிப்புணர்வுப் பேரணி

சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை யோகா விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. 

சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை யோகா விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. 
பேரணிக்கு பள்ளித் தலைமையாசிரியர் அறிவுடைநம்பி தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர்கள் சம்பந்தம், வரதராஜன், சம்பத்குமார், உடற்கல்வி இயக்குநர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை பள்ளிச் செயலர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்ற இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. இதில் அரிமா சங்கத் தலைவர் யுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com