நாகை அருகே லாரியில் மணல் கடத்திய இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், நாகூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸார் நாகூர் காவல் சரகத்துக்குள்பட்ட கங்களாஞ்சேரி பகுதியில், சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த ஒரு லாரியில் சோதனை செய்தபோது அதில், திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியிலிருந்து நாகைக்கு 4 யூனிட் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
லாரியின் ஓட்டுநர் நரிமணம் பகுதியைச் சேர்ந்த காத்தான் மகன் முத்துக்குமாரை (33) கைது செய்த போலீஸார், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்தனர்.