அதிமுகவை விமர்சித்து முகநூலில் கருத்து: ஒருவர் மீது வழக்கு

அதிமுக மற்றும் தமிழக சட்டப் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் குறித்து

அதிமுக மற்றும் தமிழக சட்டப் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் குறித்து முகநூலில் ஆட்சேபணைக்குரிய விதமாக கருத்து பதிவிட்டவர் மீது நாகை போலீஸார் வழக்குப்
பதிந்துள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்தும், இதில் அதிமுகவை சம்பந்தப்படுத்தி அக்கட்சிக்கு யாரும் வாக்களிக்கூடாது எனவும், தமிழக சட்டப் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் நாகையைச் சேர்ந்த ஒருவர், அபி அப்பா தொல்காப்பியன் என்ற பெயரில் முகநூலில் கருத்து பதிவு செய்தாராம். இதுகுறித்து நாகை, வெளிப்பாளையம், சிவன் செட்டித் தெருவைச் சேர்ந்த அதிமுக சமூக வலைதளப் பிரிவு மாவட்டத் துணைச் செயலாளர் கோ. முத்துராமன் அளித்த புகாரின்பேரில், வெளிப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com