திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயிலில் உத்ஸவர் அகோரமூர்த்தி சுவாமி சன்னிதியில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவெண்காடு பிரம்மவித்யாம்பாள் உடனுறை சுவேதாரண்யேசுவரர் கோயிலில் லட்சார்ச்சனை தொடங்கியதையடுத்து, உத்ஸவர் அகோரமூர்த்தி சுவாமிக்கு பால், திரவியப் பொடி, இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர், மலர் அலங்காரம் செய்யப்பட்டு அர்ச்சனை நடைபெற்றது. இதில், கோயில் நிர்வாக அதிகாரி முருகன், சிவானந்தம் உள்ளிட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.