நாகையில் ஜாக்டோ- ஜியோ போராட்ட விளக்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்டத் தலைவர் பி. அந்துவன் சேரல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின்போது சிறைசென்ற அரசு ஊழியர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாநிலச் செயலாளர் எம். சவுந்தர்ராஜன் போராட்டம் குறித்தும், அதன் முடிவுகள் குறித்தும் பேசினார். மாநிலச் செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை வட்டச் செயலாளர் எம். தமிழ்வாணன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ஏ.டி. அன்பழகன் நன்றி கூறினார்.