8 கிராமங்களில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி

மயிலாடுதுறை அருகே ஏவிசி கல்லூரியின் பீக்காக் விரிவாக்கப் பணி திட்டத்தின்கீழ், ஒரே நேரத்தில் 8 கிராமங்களில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை அருகே ஏவிசி கல்லூரியின் பீக்காக் விரிவாக்கப் பணி திட்டத்தின்கீழ், ஒரே நேரத்தில் 8 கிராமங்களில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. 
இந்த கல்லூரியால் தத்தெடுக்கப்பட்டுள்ள பல்லவராயன்பேட்டை, மல்லியம், சித்தர்காடு, சேந்தங்குடி, பொன்னூர், மாப்படுகை, மூவலூர், மற்றும் திருவிழந்தூர் ஆகிய 8 கிராமங்களில் வாக்களிப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வுப் பேரணி நடந்தது. நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் பி.என். ரத்தினகுமார் தலைமை வகித்தார். கல்லூரி செயலர் கே.கார்த்திகேயன், முதல்வர் ஆர்.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை வட்டாட்சியர் ஆர்.மலர்விழி, தேர்தல் துணை வட்டாட்சியர் எல்.சாந்தி ஆகியோர் கலந்துகொண்டு, பேருந்துகளைக் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பீக்காக் ஒருங்கிணைப்பாளர் ஏ.ஆரோக்கியராஜ், பேராசிரியர் டி.டி.வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com