வருவாய் கோட்டத்துக்குள் வாக்குச்சாவடி அலுவலர்களை நியமிக்கக் கோரிக்கை

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவின்போது மயிலாடுதுறை வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியைச்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவின்போது மயிலாடுதுறை வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்களை வாக்குச் சாவடி அலுவலர்களாக நியமிக்க ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலாளர் நா. அசோக்குமார், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நாகை மாவட்டச் செயலாளர் காசி. இளங்கோவன் ஆகியோர் கூட்டாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சீ. சுரேஷ்குமாருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை, நாகை என இரு வருவாய் கோட்டங்களைக் கொண்டது. இரண்டும் இருவேறு மக்களவைத் தொகுதிகளைக் கொண்டவை. வாக்குச்சாவடி அலுவலர்களை நியமிக்கும்போது மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் (மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார்) பணிபுரியும் ஆசிரியர்களை சட்டப் பேரவைத் தொகுதிக்குள் நியமனம் செய்ய வேண்டும்.
நாகப்பட்டினம் வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட (நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம்) தொகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்களை அந்த மூன்று சட்டப் பேரவைத் தொகுதிக்குள் நியமிக்க வேண்டும்.
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது மாவட்ட ஆட்சியராக இருந்த முனுசாமி, இந்தக் கோரிக்கைய ஏற்றதால் ஆசிரியைகள் அதிக சிரமம் இன்றி பணிபுரிந்தனர். அதேபோல், நல்ல ஏற்பாட்டை மாவட்ட ஆட்சியர் செய்து தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com