சிறுமிக்கு பாலியல் தொல்லை: கல்லூரி மாணவர் கைது

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் பகுதியில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கல்லூரி மாணவர் ஒருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் பகுதியில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கல்லூரி மாணவர் ஒருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
கரியாப்பட்டினம் காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினாராம். இதுகுறித்து வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், போஸ்கோ சட்டத்தின்கீழ் அந்த இளைஞரை போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com