முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
மாடியிலிருந்து தவறி விழுந்த பெயிண்டர் சாவு
By DIN | Published On : 15th May 2019 08:45 AM | Last Updated : 15th May 2019 08:45 AM | அ+அ அ- |

நாகூர் அருகே ஒரு வீட்டின் மாடி சுவருக்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட பெயிண்டர், கீழே தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
காரைக்கால் மாவட்டம், போலகத்தைச் சேர்ந்தவர் ஆர். சின்னப்பா(55). பெயிண்டரான இவர், செவ்வாய்க்கிழமை காலை நாகூர் மேலப்பட்டினச்சேரியில் ஒரு வீட்டு மாடி சுவருக்கு வர்ணம் பூசுவதற்காக, சுவரில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, மாடியின் படியிலிருந்து சின்னப்பா நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இதுகுறித்து நாகூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.